/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 22, 2025 11:38 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைகள், தீர்வுகள், முடிவு பெறாத புகார்கள் குறித்த குறைதீர்வு கூட்டம் எஸ்.பி., ரஜத் சதுர்வேதி தலைமையில் நேற்று நடந்தது. பொதுமக்களிடமிருந்து 33 மனுக்கள் பெறப்பட்டது. நிறைவு பெறாத இந்த வழக்குகள் குறித்து உரிய முறையில் விசாரணை செய்து உடனடி தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஏடி.எஸ்.பி., சரவணன் மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.