ADDED : ஜூன் 04, 2025 09:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், 38 புகார் மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில், பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர். இதற்கிடையே மனு மீதான நடவடிக்கையில் திருப்தி இல்லாத தீர்வுகள், முடிவு பெறாத புகார்கள் தொடர்பாக எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கினார். பொதுமக்களிடமிருந்து 38 புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்தார். தொடர்ந்து புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து உடனடியாக தீர்வு காண போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் சரவணன், திருமால் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிடோர் பங்கேற்றனர்.