sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பொதுமக்கள் மனு

/

ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பொதுமக்கள் மனு

ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பொதுமக்கள் மனு

ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பொதுமக்கள் மனு


ADDED : டிச 09, 2024 10:00 PM

Google News

ADDED : டிச 09, 2024 10:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி :க.அலம்பளத்தில் ஏரி வாய்க்கால் கரை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பளத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு:

க.அலம்பலத்தில் உள்ள ஏரி பாசன வாய்க்காலை ஒட்டியவாறு பல ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் பயிர்கள் 7 மீ., அகலம் கொண்ட வாய்க்கால் கரை வழியாக வெளியே கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், பொதுமக்கள் நடக்க முடியாத அளவுக்கு வாய்க்கால் கரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், அறுவடை செய்யும் பயிர்களை ஒன்றரை கி.மீ., தொலைவிற்கு சுமந்து செல்ல வேண்டிய நிலை நீடிப்பதால் விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுக்கு முன் மனு அளித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

எனவே, க.அலம்பலம் ஏரி வாய்க்கால் கரை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us