sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனுக்கள் வழங்கல்

/

அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனுக்கள் வழங்கல்

அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனுக்கள் வழங்கல்

அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனுக்கள் வழங்கல்


ADDED : பிப் 19, 2025 04:45 AM

Google News

ADDED : பிப் 19, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

மனுக்களின் விபரம்:

திருக்கனங்கூரில் 1,000த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்ல போதிய வாகன வசதி இல்லாததால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலை வசதி இல்லாததால் விபத்து ஏற்படுகிறது.

கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் 1 கி.மீ., துாரம் சென்று பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.

தியாகதுருகம்


உதயமாம்பட்டு, வடதொரசலுார் எல்லையில் வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு மூன்று சென்ட் வீதம் 97 நபர்களுக்கு வீட்டு மனை வழங்க முதல்கட்டமாக முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பயனாளிகள் அதிகமானதால் அந்த இடத்தை 2 சென்ட் வீதம் 147 பயனாளி பட்டியல் தயார் செய்யப்பட்டது.

இதனால் உதயமாம்பட்டு, வடதொரசலுார், வேளானந்தல், பிரதிவிமங்கலம் காலனி மற்றும் அருந்ததியின மக்கள் இடையே தகராறு ஏற்படுகிறது. இதுவரை பட்டா வழங்கவில்லை.

எனவே, 97 பயனாளி கள் பட்டியலை விசாரித்து மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணலுார்


இப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மாரியம்மன் கோவில் இடிந்து விட்டது. கோவில் இருந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

சிலர் மோசடி செய்து கோவில் இடத்தின் ஒரு பகுதியை பத்திர பதிவு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பை மீட்டு கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us