/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
/
அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 24, 2026 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: தென்கீரனுார் காலனி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் காலனி பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய், குடிநீர், தானிய உலர்களம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் வார்டு கவுன்சிலர் கமலா இளையராஜா தலைமையில் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

