தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க பொது மக்களுக்கு கோரிக்கை

குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க பொது மக்களுக்கு கோரிக்கை

குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க பொது மக்களுக்கு கோரிக்கை


ADDED : செப் 19, 2026 03:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 03:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் பேருராட்சியில் குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என பொது மக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

சங்கராபுரம் பேரூரராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகளை செயல்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படும்  குப்பைகளை மக்கும் கழிவு, மக்காத கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு வகை கழிவு  என 4 வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டும்.

அக்டோபர் 1ம் தேதி முதல் தரம் பிரிக்காமல் வழங்கப்படும் குப்பைகளை வீடுகளில் இருந்து சேகரிக்கப்படமாட்டாது. இதற்கான 4 வகையான குப்பைகளை  தனித்தனியாக சேகரிக்கும் வகையில் குப்பை தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள்  குப்பைகளை தரம் பிரித்து வழங்கி பேரூராட்சியில் துாய்மை மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு  வழங்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us