sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது; விண்ணப்பங்கள் வரவேற்பு

/

ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது; விண்ணப்பங்கள் வரவேற்பு

ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது; விண்ணப்பங்கள் வரவேற்பு

ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது; விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜூன் 10, 2025 10:08 PM

Google News

ADDED : ஜூன் 10, 2025 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகள், பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளின் திறமையை பாராட்டியும், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவில் வசிக்கும், 18 வயதுக்குட்பட்டோர் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தின் மூலம், ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விருதுக்கான விண்ணப்பத்தை குழந்தையோ அல்லது குழந்தையை சார்ந்த பெற்றோர், ஆசிரியர் மூலம் பரிந்துரைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us