/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கடை விற்பனையாளர் கடன் சுமையால் தற்கொலை
/
ரேஷன் கடை விற்பனையாளர் கடன் சுமையால் தற்கொலை
ADDED : பிப் 17, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த வாசுதேவனுாரைச் சேர்ந்தவர் சரவணன், 41; சின்னசேலம் நகரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடன் பிரச்னையால் சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்தார்.
நேற்று காலை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடன், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இரவு இறந்தார்.
சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.