sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாத்தனுார் அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு

/

சாத்தனுார் அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு

சாத்தனுார் அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு

சாத்தனுார் அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு


ADDED : நவ 18, 2024 10:59 PM

Google News

ADDED : நவ 18, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததையடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனுார் அணை உள்ளது. அணையின் முழு உயரமான 119 அடியில் 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து அணைக்கான நீர்வரத்து உயர்ந்து 117 அடியை எட்டி 6,875 மில்லியன் கன அடி நிரம்பியது. தொடர்ந்து, அணை திறக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

இதன் மூலம் திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து ராகவன் வாய்க்கால், மலட்டாறு, பம்பை வாய்க்கால்களில் தண்ணீர் திருப்பி விடப்பட்டு 100க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. பருவ மழை குறைந்ததை அடுத்து, அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக கடந்த 15ம் தேதி காலை அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மீண்டும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக, நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி அணையில் 117.60 அடி, அதாவது 7,008 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,220 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு 95.72 சதவீதமாக உள்ளது.






      Dinamalar
      Follow us