sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிணற்றில் பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீசார் விசாரணை

/

கிணற்றில் பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீசார் விசாரணை

கிணற்றில் பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீசார் விசாரணை

கிணற்றில் பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீசார் விசாரணை


ADDED : செப் 24, 2024 06:38 AM

Google News

ADDED : செப் 24, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது கணவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சுதா, 28. இவர்களுக்கு பிரதீஷ், 6; நிகிதா, 4; என 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை க.மாமனந்தலில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து, எரிந்த நிலையில் சுதாவின் உடலை கள்ளக்குறிச்சி போலீசார் மீட்டனர்.

இதுகுறித்து கொலை வழக்குப் பதிந்து, தலைமறைவான சுதாவின் கணவர் கார்த்திக்கை தேடி வந்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் மது போதையில் இருந்த கார்த்திக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். கார்த்திக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை, செப். 24-

உளுந்துார்பேட்டையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ஒரே பதிவெண்ணில், நான்கு ஆம்னி சொகுசு பஸ்கள் இயக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில், பல ஆம்னி சொகுசு பஸ்கள் வரி செலுத்தாமலும், ஒரே பதிவெண்ணில் பல பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்தது. அதனையொட்டி, வட்டார போக்குவரத்து துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து துறை, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் நேற்று காலை 11:00 மணியளவில் உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வாகன சோதனை மேற்கொண்டார்.

அப்போது, மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற பிஒய்.05.ஜெ.3485 பதிவெண் மற்றும் வரதன் என்ற பெயர் கொண்ட ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில், சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டது தெரிய வந்தது.

டோல்கேட் பூத்தில் ஆய்வு செய்தபோது, இதே பதிவெண்ணில் 4 ஆம்னி சொகுசு பஸ்கள் உளுந்துார்பேட்டை டோல்கேட் வழியே கடந்து சென்றது 'பாஸ்டேக்' மூலம் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர், ஆம்னி பஸ்சில் வந்த பயணிகளை இறக்கி, மாற்று பஸ்சில் அனுப்பி வைத்த பின், பஸ்சை பறிமுதல் செய்தார்.

இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் கூறுகையில், 'ஒரே பதிவெண்ணில் இயக்கிய 4 தனியார் சொகுசு பஸ் உரிமையாளர் புதுச்சேரியை சேர்ந்த செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த உள்ளோம். அவர் மீது ஒரே பதிவெண்ணில் 4 பஸ்சுகளை இயக்கி, அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியது மற்றும் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க உள்ளோம்' என்றார்.






      Dinamalar
      Follow us