sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெங்களூருவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி

/

பெங்களூருவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி

பெங்களூருவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி

பெங்களூருவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி


ADDED : அக் 27, 2024 04:58 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : பெங்களூருவில் இயற்கை பேரிடரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அறிவித்த 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு ெஹன்னுாரில் கடந்த 22ம் தேதி பெய்த கன மழை காரணமாக கட்டுமானப் பணி நடந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான பணிக்குச் சென்றிருந்த கள்ளக்குறிச்சி அடுத்த கூந்தலுார் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்தியராஜ் ஆகியோர் இறந்தனர்.

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், நிவாரண நிதிக்கான காசோலையை இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கலெக்டர் பிரசாந்த் நேற்று வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குப்புசாமி, தாசில்தார் கமலக்கண்ணன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us