ADDED : டிச 09, 2024 07:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலர்ச்சி இலவச பயிற்சி மாணவர்கள் நிவாரணம் பொருட்கள் வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம், வானபுரத்தில் இயங்கி வரும் ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் மலர்ச்சி பயிற்சி மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு போர்வை உள்ளிட்ட தொகுப்பினை 250 குடும்பங்களுக்கு வழங்கினர். அறக்கட்டளையின் நிறுவனர் வெற்றிவேல், கலைவாணி, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.