/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
/
விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 02, 2026 04:02 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு, மைக்கேல்புரம், சவேரியார்பாளையம், அருளம்பாடி மேல் சிறுவலுார், மணலுார், பவுஞ்சிப்பட்டு , கடுவனுார், பாக்கம், புதுார், வடபொன்பரப்பி, புதுப்பட்டு மற்றும் ரங்கப்பனுார் பகுதிகளில் கபடி, சிலம்பம், கராத்தே, கிரிக்கெட், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில் அதிக அளவில் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால், இவர்கள் பயிற்சி பெற போதிய விளையாட்டு மைதானம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்தால் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளது.
எனவே, இப்பகுதியில் உள்ள மாணவர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

