ADDED : பிப் 27, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த கூவனுார், வெள்ளிப்பாடி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் கிராமத்தில் வெள்ளிப்பாடி ஏரி உள்ளது. இதன் மூலம் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.
ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும் பகுதியில், சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் உபரி நீர் வெளியேறும் பகுதியில் தடை ஏற்பட்டு வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டிருப்பதுடன், ஏரிக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
எனவே உபரி நீர் வெளியேறும் கலுங்கல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
