sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தீபாவளி பண்டிகையையொட்டி கரும்பு வாகனங்களுக்கு... கட்டுப்பாடு

/

தீபாவளி பண்டிகையையொட்டி கரும்பு வாகனங்களுக்கு... கட்டுப்பாடு

தீபாவளி பண்டிகையையொட்டி கரும்பு வாகனங்களுக்கு... கட்டுப்பாடு

தீபாவளி பண்டிகையையொட்டி கரும்பு வாகனங்களுக்கு... கட்டுப்பாடு


ADDED : அக் 09, 2024 04:23 AM

Google News

ADDED : அக் 09, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தீபாவளி பண்டிகையையொட்டி, கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு கரும்பு வாகனங்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளதால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகளவில் நகரை கடந்து செல்கின்றன. இதனால், மாவட்ட தலை நகரமான கள்ளக்குறிச்சியில் எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கள்ளக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்கும் சமயங்களில் தியாகதுருகம், சங்கராபுரம் மார்க்கத்திலிருந்து ஏராளமான கரும்பு லோடு வாகனங்கள் நகருக்குள் நுழைந்து முக்கிய சாலைகளை கடந்து செல்கின்றன.

குறுகிய சாலையான காந்தி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளை அடைத்தபடி, கரும்பு வாகனங்கள் செல்லும் போது பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் முந்தி செல்வதற்கும், ஒன்றையொன்று கடந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும். வாகன போக்குவரத்து மிகுதியான சமயங்களில் கரும்பு வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் நகரின் மற்ற சாலைகளிலும் பிரதிபலிக்கிறது.

குறிப்பாக கலெக்டர், டி.எஸ்.பி., அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ள கச்சேரி சாலையை கடக்கும் போது கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பண்டிகை நாட்களில் நகரம் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி கரும்பு வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தம் பொருட்டு ஆர்.டி.ஓ., ஜெயபாஸ்கரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், கரும்பு வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், சர்க்கரை ஆலை டிராக்டர் உரிமையாளர் சங்க தலைவர் செல்வம், ஓட்டுநர் உரிமையாளர்கள் சங்க தலைவர் தெய்வேந்திரன், நுகர்வோர் அமைப்பு அருண்கென்னடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கரும்பு வாகனங்கள் நகரை கடந்து செல்வதற்கு நேரம் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரையும் கரும்பு வாகனங்கள் நகரை கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை நெருங்கும் நிலையில் வரும் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நகர பகுதியில் கரும்பு வாகனங்கள் செல்வதற்கு முழுமையான தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நகரை கடந்து செல்ல வேண்டும் என்றும் மற்ற நேரங்களில் மாற்று வழியில் செல்ல வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us