sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மீளாய்வு கூட்டம்

/

கள்ளக்குறிச்சியில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மீளாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மீளாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மீளாய்வு கூட்டம்


ADDED : அக் 02, 2024 11:35 PM

Google News

ADDED : அக் 02, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சி.இ.ஓ., தலைமையில் அலுவல் பணிகள் குறித்த மீளாய்வு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், எமிஸ் எனும் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிடும் பணிகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளை மேம்படுத்துதல் குறித்து சி.இ.ஓ., அறிவுறுத்தினார்.

மேலும் படிக்கும் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் புதியதாக எடுத்தல், புதுப்பித்தல், வங்கி கணக்கு துவங்குதல், தொடக்க பள்ளிகளில் திறன் வகுப்பறை துவங்குதல் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைத்தல் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

மாவட்டம் முழுவதிலிமிருந்து, அனைத்து டி.இ.ஓ.,க்கள், உதவி திட்ட அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us