/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காதுகேளாதவர் நலச்சங்கத்திற்கு அரிசி வழங்கல்
/
காதுகேளாதவர் நலச்சங்கத்திற்கு அரிசி வழங்கல்
ADDED : ஏப் 28, 2025 04:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த மாதவச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கள்ளக்குறிச்சி மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கத்திற்கு உதவியாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் குமரேசன் வரவேற்றார். அறங்காவலர் பாலமுருகன் வாழ்த்தி பேசினார். காதுகேளாதவர் நலச்சங்க உறுப்பினர்கள் 50 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. சண்முகம் நன்றி கூறினார்.

