sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

/

வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்


ADDED : ஜூன் 28, 2025 12:18 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளி எதிரே வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பகுதி சாலையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் சில வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்துடனேயே, சாலையை கடக்கும் சூழல் நிலவுகிறது.

இதையடுத்து, அந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதில் மாணவர்கள் மட்டுமின்றி, முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் பெரிய அளவிலான விபத்துகள் நடப்பதற்கு முன், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us