sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடம் மாற்றக் கோரி சாலை மறியல்

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடம் மாற்றக் கோரி சாலை மறியல்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடம் மாற்றக் கோரி சாலை மறியல்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடம் மாற்றக் கோரி சாலை மறியல்


ADDED : பிப் 15, 2024 05:25 AM

Google News

ADDED : பிப் 15, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : பொரசக்குறிச்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை வேறு இடத்தில் மாற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக கெங்கையம்மன் கோவில் அருகே பள்ளம் தோண்டும் பணி துவங்கியது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்தால், சித்திரை மாத அன்னப்படையல் நிகழ்ச்சியின் போது, மக்களுக்கு அன்னதானம் வழங்க சிரமமாக இருக்கும்.

எனவே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர், நேற்று மதியம் 2:00 மணியளவில் பொரசக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே, விருகாவூர் - அசகளத்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தற்காலிக பணி நிறுத்தம் செய்வதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மொபைல் போனில் தெரிவித்ததையடுத்து, மதியம் 2:30 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us