sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குடிநீர் பிரச்னையால் காலி குடங்களுடன் சாலை மறியல்

/

குடிநீர் பிரச்னையால் காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் பிரச்னையால் காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் பிரச்னையால் காலி குடங்களுடன் சாலை மறியல்


ADDED : ஜூன் 09, 2025 05:01 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே குடிநீர் பிரச்னையால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின் மோட்டார் பழுதாதனால் கடந்த சில தினங்களாக, குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் மா.கம்யூ., கட்சியினர் நேற்று மதியம் 12:00 மணிக்கு, கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் சாலையில், கொசப்பாடி கிராமத்தில் காலி குடங்களுடன் 'திடீர்' சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம், மின் மோட்டார் பழுதை உடனடியாக சரிசெய்து குடிநீர் வழங்க, நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்தனர். இதையடுத்து, 1:00 மணிக்கு, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us