sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி ரூ.1,537 கோடி! 3 ஆண்டுகளில் வழங்கியதாக கலெக்டர் தகவல்

/

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி ரூ.1,537 கோடி! 3 ஆண்டுகளில் வழங்கியதாக கலெக்டர் தகவல்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி ரூ.1,537 கோடி! 3 ஆண்டுகளில் வழங்கியதாக கலெக்டர் தகவல்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி ரூ.1,537 கோடி! 3 ஆண்டுகளில் வழங்கியதாக கலெக்டர் தகவல்


ADDED : செப் 10, 2024 12:12 AM

Google News

ADDED : செப் 10, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு1,537.93 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏ.கே.டி., பள்ளி கலையரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள 466 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 59.11 கோடி ரூபாய் மதிப்பலான வங்கி கடனுதவி தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக பகுதியில் 7,895, நகர்ப்புற பகுதியில் 1,058 என மொத்தம் 8,953 சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இதில் ஊரக பகுதியில் 95,460 உறுப்பினர்களும், நகரப் பகுதியில் 12,983 உறுப்பினர்கள் என மொத்தம் 1,08,443 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.506.82 கோடி, 2023--24-ல் ரூ.757 கோடி, 2024--25ஆம் நிதியாண்டு ரூ.274.11 கோடி, என கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,537.93 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் குறைந்தது 2 லட்சம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களாவது கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதலில் சுழல் நிதி வழங்கப்படும். அதனை முறையாக கையாண்ட பின் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும். கடனுதவியை முறையாக செலுத்தியபின் வங்கிகள் மூலம் அடுத்தடுத்து கூடுதல் கடனுதவிகள் வழங்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட குடும்பங்களின் எண்ணிக்கையும், அரிசி குடும்ப அட்டைத்தாரர் எண்ணிக்கையும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டுமென்பது நமது இலக்கு. மகளிர் சுய உதவிக் குழுவில் கிராமப்புறங்களை சேர்ந்த அனைத்து பெண்களும் சேர்ந்து பொருளாதாரமுன்னேற்றம் அடைந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

மகளிர் திட்டம் இயக்குனர் சுந்தர்ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us