sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதியவரிடம் ரூ.30 ஆயிரம் 'அபேஸ்'

/

முதியவரிடம் ரூ.30 ஆயிரம் 'அபேஸ்'

முதியவரிடம் ரூ.30 ஆயிரம் 'அபேஸ்'

முதியவரிடம் ரூ.30 ஆயிரம் 'அபேஸ்'


ADDED : ஏப் 30, 2025 07:12 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்; சின்னசேலத்தில் முதியவரிடம் ரூ.30 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; இவர் நேற்று காலை 9:30 மணிக்கு

சின்னசேலம் இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் உதவி கேட்டார். அந்த நபர் ரூ.20 ஆயிரத்தை ராஜேந்திரன் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து அவரிடம் கொடுத்தார். பின், அவருடைய ஏ.டி.எம்., கார்டை திருப்பி தராமல், அதற்கு பதிலாக, வேறொரு கார்டை அவரிடம் கொடுத்தார்.

தொடர்ந்து அந்த நபர், அருகில் இருந்த மற்றொரு ஏ.டி.எம் மையம் சென்றார். அங்கு ராஜேந்திரன் கார்டை பயன்படுத்தி அவரது, வங்கி கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மாயமானார்.

இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us