/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பயணியிடம் ரூ.6.5 லட்சம் 'அபேஸ்'
/
பயணியிடம் ரூ.6.5 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜூலை 31, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை:சென்னை கொளத்துாரை சேர்ந்தவர் பேச்சிமுத்து, 62; ஆட்டோ டிரைவர். துாத்துக்குடியில் இவரது பூர்வீக நிலத்தை விற்ற பணம், 6.5 லட்சம் ரூபாயுடன், துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்சில் நேற்று முன்தினம் பயணித்தார். நேற்று காலை 4:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் அருகே டீ குடிக்க பஸ் நிறுத்தப்பட்டது.
பணம் இருந்த பையை இருக்கையில் வைத்துவிட்டு, பேச்சிமுத்து டீ குடிக்க சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது, பை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருநாவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.