/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அகல் விளக்குகள் விற்பனை 'ஜோர்'
/
அகல் விளக்குகள் விற்பனை 'ஜோர்'
ADDED : டிச 13, 2024 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: தீப திருநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அகல்விளக்குகள் விற்பனை படுஜோராக நடக்கிறது.
தமிழகத்தில் கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று (12ம்தேதி) முதல் மூன்று நாட்கள் விழா கொண்டாடப்படும். தீப திருநாட்களில் வீடுகளில் அகல் விளக்குகளில் தீபம்ஏற்றி வழிபடுவது வழக்கம்.
இதனையொட்டி வெளியூரில் இருந்து அகல் விளக்குகளை மொத்தமாக வாங்கி வந்து கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்படுகிறது.
பல்வேறு டிசைன்களில் அகல் விளக்குகள் ஒரு ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் ஆர்வமுடன் அகல்விளக்குகளை வாங்கி சென்றனர்.