/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்கில் மணல் கடத்தல் : 3 பேர் மீது வழக்கு
/
பைக்கில் மணல் கடத்தல் : 3 பேர் மீது வழக்கு
ADDED : மார் 16, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்; கோமுகி ஆற்றில் பைக்கில் மணல் கடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று பொட்டியம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு பைகளில் ஆற்று மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது.
உடன் மணல் மற்றும் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்து, அக்கராயபாளையம் சிங்காரவேலன், 50; வெள்ளையன், 50; சேகர், 45; ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.