ADDED : பிப் 04, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே மணல் கடத்திய டிராக்டர் டிப்பரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளமேடு பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மணல் கடத்திய டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து, ஒடப்பன்குப்பம் பகுதியைச் சேர்ந்த வடிவேல், 37; என்பவரை கைது செய்தனர்.