/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
/
துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
ADDED : ஜன 14, 2026 06:22 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ரோட்டரி சங்கம் சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகை, இனிப்பு வழங்கப்பட்டது.
திருக்கோவிலுார் ரோட்டரி சங்கம் சார்பில், துாய்மை பணியாளர்களுக்கு பரிசு தொகை வழங்கும் நிகழ்ச்சி மணம்பூண்டியில் நடந்தது.
ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தலைவர் கோதம்சந்த் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர் கோவிந்தசாமி, தனது மனைவி பிரேமா ஆகியோரின் நினைவாக, மணம்பூண்டியில் உள்ள துாய்மை பணியாளர்களுக்கு தலா ரூ. 2000 பணம் மற்றும் இனிப்பு வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து திருக்கோவிலுார் முக்தி அறக்கட்டளைக்கு அதன் தலைவர் வாசனிடம் ரூ. 50,000 நிதி உதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் ராஜேஷ், பொருளாளர் காமராஜ், ஊராட்சித் தலைவர் தயாளன், உறுப்பினர்கள் ஜகத், ராஜேஷ், கீர்த்தி வாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

