sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி., அறிவுறுத்தல்

/

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி., அறிவுறுத்தல்

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி., அறிவுறுத்தல்

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி., அறிவுறுத்தல்


ADDED : மார் 10, 2024 06:09 AM

Google News

ADDED : மார் 10, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் எஸ்.பி., அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு எஸ்.பி., சமய்சிங் மீனா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தில் குற்ற வழக்குகளை குறைப்பது, கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தற்போதைய நிலைகள் குறித்து எஸ்.பி., கேட்டறிந்தார்.

தொடர்ந்து காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு விரைவாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், டி.எஸ்.பி.,க்கள் கள்ளக்குறிச்சி ரமேஷ், திருக்கோவிலுார் மனோஜ்குமார், உளுந்துார்பேட்டை மகேஷ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us