நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் எஸ்.பி., ரஜத் சதுர்வேதி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை, சரித்தர குற்றவாளிகளின் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், புகார் அளிக்க வருபவர்களிடம் கனிவுடனும், பிரச்னைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன்மற்றும் போலீசார் உடனிருந்தனர்.