/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மாணவர் மாயம் போலீஸ் விசாரணை
/
பள்ளி மாணவர் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : பிப் 08, 2025 08:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே காணாமல் போன பள்ளி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த குடியநல்லுாரைச் சேர்ந்த செல்வன் மகன் முத்தரசன், 17; ஆசனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கடந்த, 6ம் தேதி காலை 8:30 மணிக்கு வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.