/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு; பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு; பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு; பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு; பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : டிச 12, 2024 07:05 AM

கள்ளக்குறிச்சி; மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், எலவனாசூர்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் கபடி, வாலிபால், பீச் வாலிபால் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதேபோல் நீச்சல், குத்துசண்டை, தடகள போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியர் மெய்யப்பன், உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், உடற்கல்வி இயக்குனர் அலாவுதீன்பாஷா, உடற்கல்வி ஆசிரியர் சாமிதுரை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் வாழ்த்தினர்.
அதேபோல் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர் முகமது அக்பர் சீருடை வழங்கி வாழ்த்தினார். இப்பள்ளி மாணவர்கள் தேனியில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் விளையாட உள்ளனர்.