/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயியிடம் ஸ்கூட்டர் மொபைல் திருட்டு
/
விவசாயியிடம் ஸ்கூட்டர் மொபைல் திருட்டு
ADDED : ஜூன் 21, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே ஸ்கூட்டர் மற்றும் மொபைல்போன் திருடுபோனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வரஞ்சரம் அடுத்த குடியநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வன், 47; விவசாயி. இவர், கடந்த 15ம் தேதி விவசாய பணிக்காக நிலத்திற்கு சென்றிருந்தார். அங்கு, தனது ஸ்கூட்டரை நிறுத்தி, அதன் மேல் மொபைல் வைத்திருந்தார்.
பணி முடிந்து வந்து பார்த்தபோது ஸ்கூட்டர் மற்றும் மொபைல் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.