/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஸ்கூட்டியில் சென்றவர் லாரி மோதி பலி
/
ஸ்கூட்டியில் சென்றவர் லாரி மோதி பலி
ADDED : ஜன 02, 2025 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; ஸ்கூட்டியில் சென்றவர் லாரி மோதி இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சியை சேர்ந்தவர் சக்திவேல்,55; இவர் நேற்று முன்தினம் மாலை 3.35 மணிக்கு ஸ்கூட்டியில் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். ஏமப்பேர் அருகே சென்றபோது பின்னாள் வந்த லாரி மோதியது.
அதில் படுகாயமடைந்த சக்திவேலை அங்கிருந்தவர்கள் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.
கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.