/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
/
கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
ADDED : ஜன 06, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்தூர்பேட்டை : திருநாவலூர் அருகே கூழாங்கற்கள் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா ஒடப்பன்குப்பம் அருகே கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கூழாங்கற்கள் ஏற்றி கொண்டிருந்த லாரியை மடக்கி பிடித்தனர்.
பின்னர் லாரியை பறிமுதல் செய்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.