தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது


ADDED : ஏப் 01, 2025 07:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 07:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னசேலம் : சின்னசேலம் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வி. கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த நபர் சின்னசேலம், அசிபா நகரை சேர்ந்த பாபு மகன் பரதன், 30; என்பதும், கடந்த ஜனவரி மாதம் மரவானத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி கன்னியம்மாளிடம் மூன்றரை சவரன் தாலி செயினை பறித்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் பரதன் கடந்த 2020ம் ஆண்டு சின்ன சேலம் பகுதியில் உள்ள எலவடி, பெரியசிறுவத்தூர், ஏரவார் உட்பட 8க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரிடமிருந்து 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் நேற்று பரதனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us