/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லஷ்மி கலை கல்லுாரியில் திறன்சார் பயிற்சி வகுப்பு
/
லஷ்மி கலை கல்லுாரியில் திறன்சார் பயிற்சி வகுப்பு
ADDED : ஜன 22, 2025 11:35 PM

கள்ளக்குறிச்சி; பங்காரம் லஷ்மி கல்லுாரியில் திறன்சார் பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் திறன்சார் பயிற்சி சிறப்பு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
துணை முதல்வர் சக்திவேல் வரவேற்றார். கலை கல்லுாரி முதல்வர் பழனியம்மாள், கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், பல்வேறு திறன்சார் பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தினர். இதில் சிறப்பு பயிற்றுனர்கள் ஸ்டாலின்பிரசன்னா, கார்திகன், தீபா, ஆரோக்கிய பாஸ்கலின் மேரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். விழாவினை தமிழ் துறை தலைவர் பெரியசாமி தொகுத்து வழங்கினார். கல்லுாரி துணை முதல்வர் சசிகலா நன்றி கூறினார்.

