sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளச்சாராய பலி சம்பவம்; பொதுமக்கள் கருத்து தெரிவிப்பு

/

கள்ளச்சாராய பலி சம்பவம்; பொதுமக்கள் கருத்து தெரிவிப்பு

கள்ளச்சாராய பலி சம்பவம்; பொதுமக்கள் கருத்து தெரிவிப்பு

கள்ளச்சாராய பலி சம்பவம்; பொதுமக்கள் கருத்து தெரிவிப்பு


ADDED : அக் 21, 2024 10:25 PM

Google News

ADDED : அக் 21, 2024 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராய பலி சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் ஆஜராகி மனுக்கள் அளித்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து 229 நபர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

ஒரு நபர் ஆணைய தலைவர், சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள், சாராய வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களிடம் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் பாதிப்பு சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் ஆஜராகி தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கலெக்டர் அலுவலக ஒரு நபர் விசாரணை ஆணை முகாம் அலுவலகத்தில் நேற்று மூன்று பேர் மனுக்கள் அளித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us