sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில்கள் கடத்தல்: மூதாட்டி கைது

/

மது பாட்டில்கள் கடத்தல்: மூதாட்டி கைது

மது பாட்டில்கள் கடத்தல்: மூதாட்டி கைது

மது பாட்டில்கள் கடத்தல்: மூதாட்டி கைது


ADDED : மார் 22, 2025 04:03 AM

Google News

ADDED : மார் 22, 2025 04:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே பஸ்ஸில், புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார் செல்லும் தனியார் பஸ்ஸில், மூதாட்டி ஒருவர் மது பாட்டில்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நேற்று காலை தேவனூர், கூட்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பஸ்ஸில், சந்தேகத்திற்குரிய வகையில் அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர், வைத்திருந்த பையை பரிசோதித்தனர். அப்போது அவர் புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது.

அதை பறிமுதல் செய்த போலீசார், போலீஸ் நிலையத்திற்கு மூதாட்டியை அழைத்து சென்றனர். விசாரணையில் அவர், செஞ்சியை அடுத்த மலையரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யசோதை, 80; என தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us