ADDED : ஜன 09, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் அரவிந்த், 23; ஏ.சி., மெக்கானிக். கடந்த 6ம் தேதி மாலை 5:30 மணியளவில் அரவிந்து தனது துணிகளை எடுத்துக்கொண்டு அயர்ன் செய்யும் கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.