ADDED : ஆக 24, 2025 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 23; டிப் ளமோ பட்டதாரி. இவர், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.
கடந்த 9ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் சுரேஷ் கிடைக்கவில்லை.
மாயமான மகன் சுரேஷ்சை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை மெக்கியான் போலீசில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.