ADDED : ஜன 03, 2026 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகன் வீடு திரும்பவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் முருகன், 22; கட்டட தொழிலாளி. திருமணமாகவில்லை. கடந்த 28ம் தேதி மாலை 5:00 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தந்தை குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

