sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாற்றுத்திறனாளிகள் நலனில் தனி கவனம்

/

மாற்றுத்திறனாளிகள் நலனில் தனி கவனம்

மாற்றுத்திறனாளிகள் நலனில் தனி கவனம்

மாற்றுத்திறனாளிகள் நலனில் தனி கவனம்


ADDED : டிச 20, 2024 11:49 PM

Google News

ADDED : டிச 20, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலெக்டர் கேக் வெட்டி கொண்டாடி, சிறப்பாக செயல்பட்ட உறுப்பினர்களுக்கு கேடயம் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் முன்னிலை வகித்தார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிரசாந்த் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கேக் வெட்டியதுடன், சிறப்பாக சேவை புரிந்த தனியார் தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளி சங்கங்கள் மற்றும் உறுப்பினர்களை பாராட்டி, கேடயம் வழங்கினார்.

தொடர்ந்து, கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரசு தனி கவனம் செலுத்தி பல்வேறு உபகரணங்கள் வழங்கி வருகிறது. இவற்றை பயன்படுத்தி நீங்கள் வாழ்வில் முன்னேறவேண்டும் எனப் பேசினார்.

தொடர்ந்து, நடந்த மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகளை கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் பார்வையிட்டார்.

மாற்றுத்திறனாளி வீராங்கனை யசோதா, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us