ADDED : நவ 10, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த கிருஷ்ணருக்கு அஷ்டமி தின சிறப்பு பூஜைகள் நடந்தது.
கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு அஷ்டமி தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.
கோவிலில் ராதா, ருக்மணி, கிருஷ்ணர் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கிருஷ்ணர் பஜனை பாடல்களைப் பாடி, தரிசனம் செய்தனர்.