sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெருமாள் கோவிலில் யுகாதி சிறப்பு வழிபாடு

/

பெருமாள் கோவிலில் யுகாதி சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவிலில் யுகாதி சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவிலில் யுகாதி சிறப்பு வழிபாடு


ADDED : மார் 31, 2025 05:06 AM

Google News

ADDED : மார் 31, 2025 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி, கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி நேற்று யுகாதி உற்சவம் நடந்தது. அதிகாலை சுப்ரபாத சேவை, கோ பூஜை நடந்தது. தொடர்ந்து விஸ்வக்சேனர் வழிபாடு, கலச ஆவாஹனம் பூஜைகள் நடந்தன.

பெருமாள் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் உற்சவர்கள் தரிசனம் தந்தனர். பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மங்கல பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்தபின், சாற்றுமுறை சேவை, அலங்கா தீபங்கள் வழிபாடுகள் நடந்தன. பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார். இதேபோல கள்ளக்குறிச்சி, வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அம்மன் நகர் ஆரா பெருமாள் கோவில்களிலும் யுகாதி சிறப்பு பூஜைகள் நடந்தன.






      Dinamalar
      Follow us