/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நகராட்சிகள், பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம்
/
நகராட்சிகள், பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம்
நகராட்சிகள், பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம்
நகராட்சிகள், பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம்
ADDED : அக் 25, 2025 07:06 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அந்தந்த வார்டு உறுப்பினர் தலைமையில் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அந்தந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப் போர் நல சங்க பிரதிநிதிகள் பங்கேற்று குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுது, பூங்கா பராமரிப்பு, மழை நீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதி களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் தெரிவிக்கும் பிரதான 3 கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

