/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா
/
சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஜூலை 25, 2025 10:41 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியை கடலுார் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
திருக்கோவிலூர், சாரதா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியின் 4ம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. கடலூர் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாட்டு போட்டிக்கான ஜோதியை ஏற்றி, விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். தாளாளர் பிரபு முன்னிலை வகித்தார்.
பள்ளியின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.