sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுாரில் அறிவு சார் மையம் மாணவர்கள் பயன்படுத்த வேண்டுகோள்

/

திருக்கோவிலுாரில் அறிவு சார் மையம் மாணவர்கள் பயன்படுத்த வேண்டுகோள்

திருக்கோவிலுாரில் அறிவு சார் மையம் மாணவர்கள் பயன்படுத்த வேண்டுகோள்

திருக்கோவிலுாரில் அறிவு சார் மையம் மாணவர்கள் பயன்படுத்த வேண்டுகோள்


ADDED : பிப் 26, 2024 06:16 AM

Google News

ADDED : பிப் 26, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் புதிதாக திறக்கப்பட்ட நுாலகம் மற்றும் அறிவு சார் மையத்தை போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கமிஷனர் கீதா செய்திக்குறிப்பு:

திருக்கோவிலுார் நகராட்சிக்குட்பட்ட செவலை ரோடு, அண்ணா நகரில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் நுாலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான 2000 நுால்கள் இடம் பெற்றுள்ளது.

அமைதியான சூழலில், விசாலமான இடத்தில், 50 பேர் அமரும் வகையில் வசதியான இருக்கையுடன் அமைக்கப்பட்டிருக்கும் நுாலகம் காலை 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வில் பங்கேற்போர் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us