/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆபத்தை உணராமல் நீர் நிலைகளில் கும்மாளம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை
/
ஆபத்தை உணராமல் நீர் நிலைகளில் கும்மாளம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை
ஆபத்தை உணராமல் நீர் நிலைகளில் கும்மாளம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை
ஆபத்தை உணராமல் நீர் நிலைகளில் கும்மாளம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை
ADDED : நவ 29, 2024 07:00 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பருவ மழை காலங்களில் பெரும்பாலான ஏரிகள், குளம், ஆறுகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிந்து காணப்படும். நீர் நிலைகள் தண்ணீர் அதிகளவில் தேங்கி இருக்கும் போது இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் பலர் குளித்து வருகின்றனர். கடந்தாண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் குளித்த சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் இளைர்கள் ஒரு சிலரும் நீர் நிலைகளில் மூழ்கி இறந்தனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.கல்வராயன் மலையின் அடிவார பகுதியில் அமைந்துள்ள கோமுகி அணை உட்பட கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்கள் உட்பட பல்வேறு நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது.
கிராமப் புறங்களில் உள்ள நீர் நிலைகளில் சிறுவர்கள் பலர் ஆபத்தை உணராமல் பாதுகாப்பற்ற முறையில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக பல நீர் நிலைகளில் சகதிகள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது. இந்த நீர் நிலைகளில் சிறுவர்கள் உயரமான இடங்களில் இருந்தும், உயர்ந்த மரக்கிளை களிலிருந்தும் தண்ணீரில் குதித்து நீந்தி விளையாடி மகிழ்கின்றனர்.சிலர் ஆபத்தை உணராமல் அதிகளவு ஆழம், பாறை இடுக்கு, சேரும் சகதியும் மிகுந்த பகுதியில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்து போகும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
குறிப்பாக 10 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள் எந்தவித பாதுகாப்பு இன்றி நீச்சல் பழகி வருகின்றனர். இதனால் சிறுவர்கள் தண்ணீரில் உள்ள சகதிகளில் எதிர்பாராவிதமாக சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது. சில நேரங்களில் ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று சிறுவர், சிறுமிகள் இறந்து போகும் துயரமான சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கிறது.எனவே, இதனை தடுக்கும் பொருட்டு ஆபத்தை உணராமல் நீர் நிலைகளில் குளிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு கலெக்டர் பிரசாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

