ADDED : நவ 30, 2024 06:53 AM
அ நிறம் | அளவு
சின்னசேலம், : கடத்துார் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகளை பாதுகாத்திட இரும்பு கூண்டு அமைப்பதற்கான ஆய்வு பணி நடந்தது.
கடத்துார் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், மாத்துார் கந்தசாமி கோவில்களில் விக்ரகங்களை பாதுகாக்க இரும்பு கூண்டுகள், அமைக்கப்பட உள்ளது. 6 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 இரும்பு கூண்டுகள் வைக்கப்பட உள்ளது.
இதற்காக அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி ஆய்வு செய்தார்.
