/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தண்டவாளத்தில் திடீர் விரிசல்; 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்
/
தண்டவாளத்தில் திடீர் விரிசல்; 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்
தண்டவாளத்தில் திடீர் விரிசல்; 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்
தண்டவாளத்தில் திடீர் விரிசல்; 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்
ADDED : டிச 24, 2024 07:31 AM
திண்டிவனம்: சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை, 8:30 மணிக்கு விழுப்புரம்மாவட்டம், தொழுப்பேடு, கரசங்கால் ரயில் நிலையம் அருகே வந்த போது, தண்டவாளத்தில் திடீர் சத்தம் கேட்டதால், ரயில்வே ஊழியர்கள், ரயில் இன்ஜின் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அந்த ரயில் கரசங்கால் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது.
ஊழியர்கள், சத்தம்கேட்ட பகுதியை ஆய்வு செய்தனர். அதில், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து, உடனடியாக சீரமைத்தனர்.
தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு, கரசங்கால் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில், புறப்பட்டு சென்றது.
இதன் காரணமாக, சென்னை - திருப்பதி எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 30 நிமிடம் தாமதமாக சென்றன.